மரக்கறிக்குள் கஞ்சா..! கடத்தல் முயற்சி முறியடிப்பு, யாழ்.புன்னாலைகட்டுவனில் அதிரடி..
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து மரக் கறிக்குள் கஞ்சா கடத்திய ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் 6 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக
சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்
மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட் நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட
கஞ்சா போதைப் பொருள் ஆகியன நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையை சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.