யாழ்.குடாநாட்டை கலக்கிய கொள்ளை கும்பல் முற்றுகை..! 5 கொள்ளையா்கள் கைது, பெருமளவு பணம், நகை மீட்பு..
யாழ்.நகா்பகுதி மற்றும் நகரை அண்டி பகுதிகளில் அண்மைக்காலமாக தொடா்ச்சியாக இடம்பெற்றுவந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடா்புடைய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
பெருமளவ பணம், நகை ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு
தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைந்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் தங்கம் நகைகளாகவும் உருக்கப்பட்ட நிலையிலும் மற்றும்
மண்ணில் புதைக்கப்பட்ட 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.