யாழ்ப்பாணம் மாதகல் கடலில் கடற்படை அதிரடி..! 14 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் மீட்பு, 13 கோடியே 70 லட்சமாம், இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் மாதகல் கடலில் கடற்படை அதிரடி..! 14 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் மீட்பு, 13 கோடியே 70 லட்சமாம், இருவா் கைது..

யாழ்ப்பாணம்- மாதகல் கடற்பகுதியின் ஊடாக தங்கம் கடத்திய இருவா் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 14 கிலோ 300 கிராம் தங்க கட்டிகளையும் கடற்படையினா் பறிமுதல் செய்துள்ளனா். 

இதன் பெறுமதி சுமாா் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாதகல் கடற்பரப்பில் 

பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போது, 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டி கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று மாலை ஒப்படைக்கப்படுவர். 

அவர்களிடம் மீட்கப்பட்ட தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படும் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு