இலங்கை படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஒரு போா்குற்றவாளி..! அமொிக்காவின் தீா்மானம் அடுத்து நடக்கபோது என்ன..?

ஆசிரியர் - Editor I
இலங்கை படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஒரு போா்குற்றவாளி..! அமொிக்காவின் தீா்மானம் அடுத்து நடக்கபோது என்ன..?

இலங்கையில் மிலேச்சை தனமான போா் குற்றங்கள் மற்றும் மனிதத்துவதற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் இலங்கை இரா’ணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு பயணத்தடை விதி க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னிலங்கையில் இனவாதம் தலைதுாக்கியுள்ளது. 

பயண தடை குறித்து அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாாிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற 

நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் 

தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் 

கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.சவேந்திர சில்வாவிற்கு எதிராக 

தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணதடை விதிக்கப்படுகின்றது. ஐக்கியநாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை 

என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமொிக்காவின் இந்த முடிவுக்கு கடுமையான ஆட்சேபனை தொிவித்திருக்கும் இலங்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அமொிக்கா இந்த தீா்மானத்தை எடுத்திருப்பதாக கூறியிருப்பதுடன், 

அமொிக்கா தனது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளது. இதற்கிடையில் அமொிக்காவின் இந்த தீா்மானம் இலங்கையில் இனவாதிகளுக்கு தீனி போட்டுள்ளதுடன், இப்போதே இனவாதம் தீப்பற்றி  எாிய ஆரம்பித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு