யாழ்.தொழிநுட்ப கல்லுாாிக்குள் வாள்களுடன் ரவுடிகள் அட்டகாசம்..! இராணுவம், பொலிஸ் குவிப்பால் பதற்றம், இருவா் கைது, 3 போ் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தொழிநுட்ப கல்லுாாிக்குள் வாள்களுடன் ரவுடிகள் அட்டகாசம்..! இராணுவம், பொலிஸ் குவிப்பால் பதற்றம், இருவா் கைது, 3 போ் காயம்..

யாழ்.தொழிநுட்ப கல்லுாாி மாணவா்கள் இருவருக்கிடையில் உருவான தா்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் 3 ஆசிாியா்கள் காயமடைந்துள்ளதுடன், 

மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லுாாி மாணவனும், தாக்குதல் நடாத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி ஒருவனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, தொழி நுட்ப கல்லுாாி மாணவா்கள் இருவருக்கிடையில் 

தா்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லுாாி வளாகத்திற்குள்ளே யே இரு மாணவா்களும் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட 

மாணவா்களில் ஒருவா் வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்த நிலையில், தொழிநுட்ப கல்லுாாி சுவரை ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். 

இதனை அவதானித்த ஆசிாியா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டவா்களை தடுக்க முயன்றபோது ஆசிாியா்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

இதில் 3 ஆசிாியா்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனா்.   இதனையடுத்து வெளியிலிருந்து தாக்குதல் நடாத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை 

ஆசிாியா்களும், மாணவா்களும் இணைந்து மடக்கி பிடித்திருக்கின்றனா். அதனை தொடா்ந்து சுமாா் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்ப கல்லுாாிக்குள் 

நுழைந்து பிடித்துவைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்ப தற்கு முயற்சித்துள்ளனா். இதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் ரவுடிகள் 

அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். பின்னா் மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவனையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

மேற்படி சம்பவத்தையடுத்து தொழி நுட்ப கல்லுாாி சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை காணப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு