யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் அதிக கட்டணம் எதற்கு..? விசாரணை நடாத்த அரசாங்கம் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் அதிக கட்டணம் எதற்கு..? விசாரணை நடாத்த அரசாங்கம் பணிப்பு..

யாழ்ப்பணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கான விமான சேவைக்கு அறவிடப் படும் கட்டணத்தை குறைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என சிவில் விமான போ க்குவரத்து அதிகாாிகள் உறுதியளித்திருக்கின்றனா். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நேற்று விமானப் போக்குவர த்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் 

ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் சர்வ தேச விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து 

பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவை யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாவாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் 

விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபா அறிவிடப்ப டுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது 

குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட 

யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக 

விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு