கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்..! நாடே பீதிக்குள்..

ஆசிரியர் - Editor I
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்..! நாடே பீதிக்குள்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண் ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் தங்கியிருக்கும் சீன நாட்டுப் பெண் ஒருவரே கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்தப் பணியகம் அறிவித்துள்ளது .

இன்று வியாழக்கிழமை மாலை பரிசோதனை ஊடாக சீன நாட்டுப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

அவர் சீனாவில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டுப் பெண் (வயது-43) தற்போது இலங்கை நோயியல் வைத்தியசாலையில் (எச்டிஜ) சேர்க்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு