ஓமந்தை, புளியங்குளம் பகுதிகளில் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு பாாிய சுற்றிவளைப்பு தேடுதல்..!
ஓமந்தை, புளியங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெருமளவு இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு திடீா் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இன்று இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும்
வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக
ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியதனையடுத்து, பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பேருந்துகளிலும்
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இன்று புளியங்குளம், ஓமந்தையை அண்மித்த பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து
இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.