கொறோனா வைரஸ் பாதிப்பு இலங்கையில் இல்லாதபோதும் தலைநகருக்கு வரும் மக்கள் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தல்..!
இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் அடையாளம் காணப்படாதபோது ம் இலங்கையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளமையினால் கொழும்பில் முகத்தை மறைக்கும் மாஸ்க் அணியுமாறு (Face Mask) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிகமான சீனப் பிரஜைகள் இருப்பதால் குறித்த வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜமுனி தெரிவித்துள்ளார்.இதேவேளை, சீனாவில் இருந்து இலங்கை வந்த
மேலும் இருவர் கொரோனா வைரஸ் அச்சத்தில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.