யாழ்ப்பாணம் வரலாற்றை கூறும் 1வது அருங்காட்சியகம் “சிவபூமி யாழ்ப்பாணம் அருங்காட்சியகம்” பெருமையுடன் திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வரலாற்றை கூறும் 1வது அருங்காட்சியகம் “சிவபூமி யாழ்ப்பாணம் அருங்காட்சியகம்” பெருமையுடன் திறக்கப்பட்டது..

யாழ்ப்பாணம் வரலாற்றை கூறும் அரும்பொருட்களின் காட்சியகம் “சிவபூமி அருங்காட்சியகம்” இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் 

தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாடு, 

அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் இடம்பெற்று சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை 

நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள்,  கலாநிதிகள், 

தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளைத் திறந்து வைத்தனர். அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் திறந்துவைக்கப்பட்டது. 

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால் 

அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்து வைத்தார். கந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை 

சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார். தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசன் அவர்களின் நினைவுப் பதிவை 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார். சர்வமதத் தலைவர்கள், கற்றறிந்தவர்கள் எனப் பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், ஈ.சரவணபவன், 

இந்திய துனைத்தூதுவர் பாலச்சந்திரன் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், 

பல்கலை பேராசிரியர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு