ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,மகள்,மருமகன் தற்கொலை முயற்சி..! தாய் உயிரிழப்பு, மகள்,மருமகன் ஆபத்தான நிலையில். யாழில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,மகள்,மருமகன் தற்கொலை முயற்சி..! தாய் உயிரிழப்பு, மகள்,மருமகன் ஆபத்தான நிலையில். யாழில் சம்பவம்..

யாழ்.மிருசுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந் த 2 பேர் ஒரே நேரத்தில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

இதன்போது தாய் உயிரிழந்துள்ள நிலையில் மகளும், மருமகனும் ஆபத்தான நிலையி ல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டிருக்கின்றனர்.

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் இன்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகன் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தாயார் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மகன் மற்றும் மருமகள் ஆபத்தான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குடும்ப்பத்தினருக்கு ஏற்பட்ட கடன் தொல்லையாலையே தற்கொலை முயற்சிக்குச் சென்றதாக தெரிய வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.  

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு