தலைமையை மாற்றினால் கூட்டமைப்புடன் இணையத் தயார்!

ஆசிரியர் - Admin
தலைமையை மாற்றினால் கூட்டமைப்புடன் இணையத் தயார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையும் பட்சத்தில், மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கலந்துரையாடுவதற்கு தான் தயார் என கூறியுள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றம் தொடர்பில் எந்த திட்டமும் இல்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு