கோத்தாவுக்கே ஆதரவு - மைத்திரி உறுதி!

ஆசிரியர் - Admin
கோத்தாவுக்கே ஆதரவு - மைத்திரி உறுதி!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றினுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழு ஆதரவையும் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.     

களுத்துறை பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு புதிய ஒரு பயணத்தை எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதவளிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு