வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்..! போராடி சாரதியையும், காரையும் மீட்ட இளைஞர்கள்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்..! போராடி சாரதியையும், காரையும் மீட்ட இளைஞர்கள்..

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளத்தினா ல் கார் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. 

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களால் காரின் சாரதி பாதுகாப்பாக மீட்கப்பட்டபோதும் கார் இழுத்து செல்லப்பட்டு பாலத்திற்குள் சிக்கியது. 

இந்நிலையில் அங்கு கூடிய இளைஞர்கள் நீண்டநேரம் போராடி பாலத்திற்குள் சிக்கியிரு ந்த காரை வெளியே எடுத்துள்ளனர். 

மேற்படி பாலம் புனரமைக்கப்படும் நிலையில் தற்காலிக பாதை ஒன்று அமைக்கப்பட்டி ருந்தது அந்த வழியால் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், 

எச்சரிக்கையை மீறி வெள்ளத்தை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கார் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு