காவி உடை அணிந்தவர்களாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சினை..! அவர்களே நாட்டை பின்நோக்கி இழுத்து சென்றனர்..

ஆசிரியர் - Editor I
காவி உடை அணிந்தவர்களாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சினை..! அவர்களே நாட்டை பின்நோக்கி இழுத்து சென்றனர்..

இலங்கையின் ஆட்சியாளர்கள் நல்லவற்றை செய்ய முயற்சிக்கும்போதெல்லாம் காவி உடை அணிந்தவர்கள் தடுத்து நிறுத்தி நாட்டை பின்நோக்கி இழுத்து சென்றார்கள் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகவும் கவலையான நிலைமைக்கு, 1948 நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்யாத அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். 

நாட்டின் மத தலைவர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.இலங்கை பௌத்த சிங்கள நாடு அல்ல என மீண்டும் கூறுவதாகவும், வறுமை காரணமாக சிறிய வயதில் துறவறம் பூணப்படும் காவிதாரிகளுக்கு வயது வந்த பின்னர் பௌத்த தர்மம் பற்றி

உண்மையான அக்கறை இருக்காது.சில அடிப்படைவாத காவிதாரிகள், அறிவு குறைந்த அடிப்படைவாத சிங்கள மற்றும் தமிழர்களை இணைந்துக்கொண்டு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு