மன்னார் மயானத்திற்கு அருகில் திடீர் தீப்பரவல்

ஆசிரியர் - Editor II
மன்னார் மயானத்திற்கு அருகில் திடீர் தீப்பரவல்

மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மீது தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகரில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் நகர சபையினால் கொட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த கழிவுப்பொருட்களான குப்பையில் நேற்று மாலை திடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் எறிய தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிப்படைந்ததோடு, அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதோடு, பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக அப்பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக பௌசர் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்ட தீ அணைக்கப்பட்டது.

குப்பைகளில் காணப்பட்ட இரும்பு பொருட்களை எடுக்க சில சிறுவர்கள் முயற்சி செய்ததாகவும், இதன் போது அவர்கள் பற்ற வைத்த தீயே குப்பைமேட்டில் பரவியதாக நகர சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு