நாவற்குழி இராணுவ தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!

ஆசிரியர் - Editor II
நாவற்குழி இராணுவ தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற இருபத்தி நான்கு இளைஞர்களை பின்னர் காணாமல்போயிருந்தனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கில் 1ம் எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது எதிரிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு வழக்கறிஞர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்

இதற்கு வழக்குத்தொடுனர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டி வெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்

வழக்கை விசாரித்த நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வழக்கின் முதலாம் எதிரியான குறித்த இராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு